திருத்துறைப்பூண்டியில் சட்டவிரோதமான லாட்டரி சீட்டுகள்
NEWS May 15,2026 03:22 pm
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணமும் 160 லாட்டரி சீட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.