ஆசிரியருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு கடிதம்
NEWS May 04,2026 09:17 am
தாருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசுப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் ஆதலையூர் சூரியகுமார். பல புதுமையான உத்திகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். கல்வி, சமூகம் சார்ந்த பலநூல்களையும் எழுதி இருக்கிறார். இவருடைய கல்வி மற்றும் இலக்கிய பணிகளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்.