திருத்துறைப்பூண்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் விழா
NEWS Apr 29,2026 07:10 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள விஸ்வரூப வைராக்கிய பதினாறடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரமும் மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.