திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தேர்தல் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களது கைகளில் 100% வாக்கு என வண்ணம் தீட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றது.