திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெரு அருகே டீக்கடை நடத்தி வருபவர் முகமது உசேன் மகன் ஹாஜா அலாவுதீன் (50). இவரின் கீற்று வீடு தீயில் எரிந்து நாசமானது. போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அங்கு சென்ற முத்துப்பேட்டை தாலுக்கா வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி தீ விபத்து நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட ஹாஜா அலாவுதீன் குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி ஆறுதல் கூறினார். அவசர உதவி செய்த தமிழக அரசிற்கு ஹாஜா அலாவுதீன் நன்றி தெரிவித்தார்.