திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் பயணிகள் நிழலகம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி போன்ற நகரங்களுக்கு பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து உள்ளது. காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தர வேண்டும் என பாதெுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். உடனடியாக தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது!