பொதக்குடியில் அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி
NEWS Aug 05,2025 02:31 pm
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி அஹமதியா தெரு P.M.அமானுல்லாஹ் நினைவு அரங்கத்தில் நேற்று மாலை தமுமுக மற்றும் மமக இணைந்து நடத்திய மதுரை மாநாடு விளக்க கூட்டமும், அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக அரங்கேறியது. ஹலீல்ரஹ்மான் தலைமையில், முஹம்மதுஜெமில் வரவேற்புரையில், முஜிபுர்ரஹ்மான், தைக்கால் முபாரக், கோவை சைய்யது மூவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சிறப்புரை முடிந்த பிறகு அவசர ஊர்தியை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்து வைத்தனர். திரளான மக்கள் கூடி இருந்தனர்.