தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் அரிதாகக் காணப்படும் டோர்னாடோ (சுழற்காற்று) உருவாகியுள்ளது. கருமேகங்களும் இடியுடன் கூடிய மழை மேகங்களும் இருந்து தரையைத் தொடும் வகையில் உருவான இந்த சுழற்காற்றின் காட்சிகள் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. டோர்னாடோக்கள் என்பது இடியுடன் கூடிய சக்திவாய்ந்த மேகங்களில் இருந்து உருவாகும், அதிவேகமாகச் சுழலும் காற்றுத் தூண்கள் ஆகும். இந்தியாவில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே பதிவாகின்றன.