திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தேர்தல் கமிஷனை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.