பகுதி நேர அங்காடியை அமைச்சர் டிஆர்பி ராஜா திறப்பு
NEWS Aug 16,2025 01:42 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வேட்டைத்திடல் பொதுமக்கள் தங்களது கிராமத்திலே பகுதி நேர அங்காடி ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உத்தரவின் பேரில் வேட்டைத்திடல் கிராமத்தில் அண்மையில் பகுதி நேர அங்காடி அமைக்கப்பட்டது. வேட்டைத்திடல் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு அந்த பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.