தொழில் நுட்பக் கல்லூரியில் சுதந்திர தின விழா
NEWS Aug 16,2025 01:42 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன. நலப்பணித்திட்ட அலுவலர் இரங்கதுரை அனைவருக்கும் நன்றி கூறினார்.