திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் உரங்கள் போதிய அளவு உரக்கடைகள் மற்றும் வேளாண்மைத்துறை கிடங்குகளில் விற்பனை இருந்தது. நடப்பாண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட கடந்துள்ளது. விவசாயிகள் மும்முரத்துடன் குறுவை சாகுபடியை தொடங்கியதால் இலக்கு தாண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1,95,130 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் குறியீட்டை மிஞ்சி நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர்.