இராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் ஆடி மாத பௌர்ணமி பூஜை
NEWS Aug 10,2025 02:01 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் ஆடி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு நேற்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.