குடவாசலில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மீது மோதி விபத்து
NEWS Aug 10,2025 09:12 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து காலை 6 மணிக்கு குடவாசலில் இருந்து பாபநாசம் சென்றபோது அகர ஓகை அருகே சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில் பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அதிஷ்டவசமாக காயமேதும் இன்றி உயிர் தப்பினார்கள்.