திருவாரூரில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தேர்தலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு காணாமல் போகும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகிறதா எங்கள் கட்சி காணாமல் போகிறதா என்பது தெரியும். எங்கள் கட்சியை பற்றி எடப்பாடி கவலைப்பட தேவையில்லை என்றார்.