கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
NEWS Aug 08,2025 11:31 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் மூண்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நான்கு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்து அரங்கேறியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.