திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை சேர்ந்த தீபன் என்பவர் சிங்கப்பூர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். தொழிலில் முதலீடு செய்ய பாஜக கட்சி மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய சங்கரிடம் தீபன் பணம் கொடுத்ததாக தெரிகிறது. பிறகு தேவை என்ற சமயத்தில் சங்கரிடம் தான் கொடுத்த பணத்தை அவரது வீட்டிற்கே சென்று தீபன் கேட்டுள்ளார். அதற்கு சங்கர் பணம் வாங்கவே இல்லை என்று மறுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு நடந்துள்ளது. தீவிர விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் யார் நிரபராதி யார் குற்றவாளி என்பதில் மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.