திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் உள்ள அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலை பள்ளியில் அந்தத் துறையின் ஆணையர் ஆனந்த் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இன்று பள்ளிக்கு வருகை தந்து நேரடி ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியின் கட்டிடம் மாணவர்களின் கல்வித்தரம் மாணவர்களுக்கான உணவு மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.