ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா
NEWS Aug 07,2025 12:10 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை ஒட்டி ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், சந்தனம் மற்றும் மஞ்சள் தூள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.