1999ல் லாக்அப் மரண வழக்கில் டிஎஸ்பி உட்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை!
NEWS Apr 06,2025 07:51 pm
தூத்துக்குடியில் 1999ல் நடந்த லாக் அப் மரண வழக்கில் ஸ்ரீவைகுண்டம் DSP உட்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் அப்போதைய SI ராமகிருஷ்ணணன் (தற்போது DSP) உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவான நிலையில், ஓய்வு பெற்ற காவலர்கள் இருவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.