திருவாரூரில் இப்படி ஒரு இடமா?
NEWS Apr 04,2025 08:50 pm
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் 'தமிழ் வாழ்க' எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.