நடிகர் ரவிக்குமார் காலமானார்
NEWS Apr 04,2025 08:46 pm
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார் தனது 71 வயதில் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று சென்னையில் காலமானார். தமிழில் பாலசந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். பகலில் ஓர் இரவு படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் வரும் 'இளமை எனும் பூங்காற்று' பாடல் இவரை வெளியே தெரிய வைத்தது.