மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு
NEWS Mar 16,2026 09:10 pm
கிருஷ்ணகிரி: 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அத்திகுண்டா மதுவிலக்கு சோதனைச் சாவடியில்(16.03.2026) வாகனத் தணிக்கை நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகள் மற்றும் தீவிரக் கண்காணிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.