திருவாரூர் கொடிக்கால்பாளையம் பணப்பகுதியில் இன்று மாலை சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து நடத்திய இந்த இஃப்தார் பெருவிழா மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.