சங்கேந்தியில் குடிநீர் பிரச்சினையால் சாலை மறியல்
NEWS Mar 05,2026 04:38 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சங்கேந்தி பகுதியில் ஆறு வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே சங்கேந்தி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தை சுமூகமானதும் சங்கேந்தி மக்கள் ஒருமனதாக கலைந்து சென்றனர்.