ஆய்குடியில் ஒத்தையடி பாலம் சிதிலமடைந்துள்ளது
NEWS Feb 27,2026 08:08 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியிலிருந்து பூதமங்கலம் செல்லும் வழியில் உள்ள ஆய்குடி அக்கறையில் தான் மக்கள் வசிக்கிறார்கள். அன்றாடம் பள்ளி, வேலை மற்றும் சந்தைக்கு சென்று வரும் ஒத்தையடி பாலம் சிதிலமடைந்து தொங்குகிறது. மாணவர்கள், முதியவர்கள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.