திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்ட அவர்கள் கோவிலின் சிறப்புகள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர். கோவில் வளாகத்தை சுற்றிப்பார்த்தனர். பக்தி பரவசத்துடன் நேரம் கழித்தனர். நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.