திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு பகுதி பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொங்கு சனீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.