திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் பாலவராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தக்காளி பழங்களால் பாலவராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விஜய வராகி அம்மனை தரிசனம் செய்தனர்