பொதக்குடி பள்ளி திறப்பு விழாவில் இந்துக்கள் சீர்வரிசை
NEWS Feb 06,2026 03:16 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் உமர்பின் கத்தாப் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் ஆய்குடி, அதங்குடி, அகரபொதக்குடி, சேகரை, வாழச்சேரியில் இருந்து இந்து மத சகோதரர்கள் 146 தட்டுகளில் சீர்வரிசையாக பூ பழங்கள், இனிப்பு வகைகள் வாழைத்தார்கள் பொருட்களுடன் கொண்டு வந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.