திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலராஜவீதி சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக உயர் கோபுர மின்விளக்கை அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.