தாசில்தாரை தாக்கிய மூவர் கைது
NEWS Feb 03,2026 03:30 pm
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணை தாசில்தார் கணேசன்(58). பெரம்பூர் அறிவழகன்(54), சுரேஷ்(48), அசோகன்(65) மூவரும் வருமானச்சான்று விண்ணப்பித்தனர். சரிபார்த்த துணை தாசில்தார் உங்கள் மீதான வழக்கு முடிந்தவுடன் தருவதாக தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த மூவரும் தாசில்தாரை தாக்கினர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீராசாமி மூவரையும் கைது செய்தார்.