திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செருமங்கலத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் வள்ளி தெய்வானைக்கு தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பால்குடம் மற்றும் காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர். வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.