வெள்ளக்குடியை சேர்ந்த மாணவி பதக்கம் வென்றார்
NEWS Feb 02,2026 10:57 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அரசு பள்ளியில் பயிலும், வெள்ளக்குடியை சேர்ந்த மாணவி பிரகதீஸ்வரி, டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த சாதனை பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவி தேசிய அளவில் பதக்கம் வெல்வது பிற மாணவர்களுக்கு ஊக்கமாக உள்ளது.